நங்கநல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

நங்கநல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை
நங்கநல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

சென்னை - நங்கநல்லூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளியை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

சென்னை நங்கநல்லூர், அய்யப்பா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் தனது உறவினரின் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்விற்காக குடும்பத்துடன் வெளியூர் சென்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com