புதுக்கோட்டை: திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 30 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை: திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 30 பவுன் நகை திருட்டு
புதுக்கோட்டை: திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 30 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை அருகே திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மன்னவேளாண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தனது மகள் திருமணத்திற்காக 30 பவுன் தங்க நகையை பீரோவில் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்க்கையில் நகை திருடப்பட்டிருப்பதை கண்டு தங்கராஜ் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இதுகுறித்து அன்னாவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கராஜ் மகள் நித்யாவிற்கு வரும் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com