பெரம்பலூர்: நடுரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது

பெரம்பலூர்: நடுரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது

பெரம்பலூர்: நடுரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது
Published on

பெரம்பலூர் அருகே நடுரோட்டில் பட்டாக் கத்தியால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பட்டதாரி இளைஞர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணண். இவரது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடியுள்ளார். பின்னர் மது போதையில் கேக் வாங்கி வந்து பெரம்பலூர் ஆத்தூர் சாலை வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை குறுக்காக நிறுத்தியுள்ளனர். பின்பு இருசக்கர வாகனத்தின் மீது கேக்கை வைத்து, மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் சென்றவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தகவலறிந்த அரும்பாவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதையடுத்து வேப்பந்தட்டையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணண் (24), ஜனார்த்தனன் (20), தொண்டாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, செல்வக்குமார் (30) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேப்பந்தட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com