முதுகுளத்தூர்: டாடா ஏஸ் மூலம் பசுமாடுகளை திருடிய 3 பேர் கைது

முதுகுளத்தூர்: டாடா ஏஸ் மூலம் பசுமாடுகளை திருடிய 3 பேர் கைது
முதுகுளத்தூர்: டாடா ஏஸ் மூலம் பசுமாடுகளை திருடிய 3 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே 80 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே முத்துராமலிங்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான பசுமாடுகளை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் டாடா ஏசி வாகனத்தில் கடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து மாடு கத்தும் சத்தம் கேட்டு வந்து ஜெயராமன் பார்த்துள்ளார். அப்போது மாடுகளை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயராமன் கிராமத்தினரின் உதவியுடன் மாடுகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர் ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடுகளை திருடிய பூமிநாதன், பாலகிருஷ்ணன், பசுபதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், மாடுகளை திருட பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com