குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை - காவல்நிலையத்தில் புகார்

குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை - காவல்நிலையத்தில் புகார்
குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை - காவல்நிலையத்தில் புகார்

செங்குன்றம் அருகே குடும்பத் தகராறில் கோபப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறிய பெண்ணை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செங்குன்றம் பாடியநல்லூர், வடிவேல் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அம்பிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்த வண்ணம் இருந்து வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 16-ஆம் தேதி காலை விஜயகுமாருக்கும் அம்பிகாவும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பிகா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அனைவரும் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் அம்பிகா 16-ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியேறி 11.50 முதல் செல்போனை அணைத்து வைத்துள்ளார் எனவும் அவரை தேடி கண்டுபிடித்து தர போலீசார் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்பிகாவின் சகோதரர் சரவணன் கூறுகையில், “என் தங்கை காணமல்போய் இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 16-ஆம் தேதியே புகார் அளித்தோம். இப்போதுதான் எஃப்.ஐ.ஆர் காப்பியை பெற்றுள்ளேன். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களில் யாருக்காவது, அம்பிகா பற்றி தெரியவந்தால், 6382367007 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com