குஜராத்: மகளை காதலித்த இளைஞருக்கு சேலை அணிவித்து அடித்தேக் கொன்ற தந்தை கைது

குஜராத்: மகளை காதலித்த இளைஞருக்கு சேலை அணிவித்து அடித்தேக் கொன்ற தந்தை கைது
குஜராத்: மகளை காதலித்த இளைஞருக்கு சேலை அணிவித்து அடித்தேக் கொன்ற தந்தை கைது

குஜராத்திலுள்ள ஒரு கிராமத்தில் தனது மகளை காதலித்ததற்காக 20 வயது இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அவரது தந்தை அடித்தே கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்திலுள்ள சோக்கரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜயேஷ் ராவல்(20). தினக்கூலி வேலைக்கு செல்லும் ராவல் தனது பகுதியிலேயே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் தந்தை காளிதாஸ் மாலி இரண்டு மாதங்களுக்கு முன்பே ராவலை எச்சரித்திருக்கிறார். ஆனாலும் ராவல் தனது காதலியை சந்திப்பதை நிறுத்தவில்லை.

புதன்கிழமை மதியம் காளிதாஸின் வயலுக்கு அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்ததை அந்தப் பெண்ணின் தாயார் பார்த்துவிட்டு, இதுகுறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் பயந்துபோன ராவல் தனது வீட்டிற்கு ஓடிவிட்டார். ஆனாலும் காளிதாஸ், கிரண் மாலி, மோகன் மாலி மற்றும் ரமேஷ் மாலி ஆகிய மூன்று பேருடன் ராவல் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டின் உள்ளே இருந்து அவரை இழுத்துக்கொண்டு வந்து அவருக்கு சேலை உடுத்தி அருகிலிருந்த மரத்தில் கட்டிவைத்து குச்சியால் அடித்து தாக்கியுள்ளனர். மேலும் ராவலை எட்டி உதைத்து அந்தரங்க பாகங்களை தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த ராவலின் உறவுக்காரர் அவருக்கு உதவச் சென்றபோது அடித்து உதைத்த நான்குபேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ராவலின் கட்டுகளை அவிழ்த்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், அங்கு வரும்முன்பே ராவல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து ராவலின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் குற்றவாளிகள் நான்குபேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பெண்ணின் தந்தை காளிதாஸ் உட்பட நான்குபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காதலித்ததற்காக 20 வயது இளைஞரை அடித்து உதைத்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com