தேனியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - இளைஞர், 17 வயது சிறுவன் கைது

தேனியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - இளைஞர், 17 வயது சிறுவன் கைது
தேனியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - இளைஞர், 17 வயது சிறுவன் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணை கொலைசெய்த வழக்கில் ஒரு இளைஞர் மற்றும் 17 வயதுச் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் குள்ளப்பகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள நியாய விலை கடை அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த மயில் என்ற பெண் அரை நிர்வாணத்துடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அறிந்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அப்பகுதி சிசிடிவி கேமராவின் மூலம் ஆய்வு செய்ததில் நள்ளிரவில் இருவர் நடந்து செல்வதை கண்டுபிடித்தனர். அவர்கள் யார் என விசாரித்ததில் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் குடியிருக்கும் முருகன் என்பவர் மகன் அரவிந்த்குமார் (25) மற்றும் அவருடன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் என கண்டறிந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். குற்றத்தை ஒத்துக்கொண்ட இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com