வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு: சுற்றி வளைத்த பொதுமக்கள்

வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு: சுற்றி வளைத்த பொதுமக்கள்
வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு: சுற்றி வளைத்த பொதுமக்கள்

வீட்டிற்கு வெளியே படுத்துக் கொண்டிருந்தவரின் செல்போனை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர்(37). இவர் தனது செல்போனை அருகில் வைத்துவிட்டு இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேர் அவரது செல்போனை திருடிக் கொண்டு செல்ல முயன்றனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

இதையடுத்து அவர்கள் தப்ப முயன்றபோது பொதுமக்கள் ரோந்து போலீசார் உதவியோடு இருவரையும் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவான்மியூரை சேர்ந்த மோகன்(28), லோகேஷ்(18) என்பதும் இவர்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com