கொல்லிமலை: விவசாயி கொலை - உறவினர்கள் இருவர் கைது

கொல்லிமலை: விவசாயி கொலை - உறவினர்கள் இருவர் கைது
கொல்லிமலை: விவசாயி கொலை - உறவினர்கள் இருவர் கைது

கொல்லிமலையில் நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பைல்நாடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிச்சோலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். இதனிடையே செல்வத்துக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு செல்வம் கொல்லிமலையில் உள்ள செங்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் அருகே வழிமறித்த கும்பல் ஒன்று செல்வத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழவந்திநாடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்வத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலத்தகராறு இருந்து வந்ததும் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் செல்வத்தை அவரது உறவினர்கள் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவருடைய உறவினர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com