நீட் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என திட்டிய தாய் - கழுத்தை நெரித்துக் கொன்ற மகள்

நீட் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என திட்டிய தாய் - கழுத்தை நெரித்துக் கொன்ற மகள்
நீட் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என திட்டிய தாய் - கழுத்தை நெரித்துக் கொன்ற மகள்

நீட் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என தொடர்ந்து திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவி, தனது தாயின் கழுத்தை பெல்ட்டால் நெரித்துக் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் இல்லாத சிறுமியை, அவருடைய தாய் நீட் தேர்வுக்கு படிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையின்போது, சிறுமி தனது தாயை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

தலையில் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த தாயின் கழுத்தை பெல்ட்டால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்ததாகக் கூறி சிறுமி நாடகமாடியுள்ளார். விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து சிறுமியை கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com