பானிபூரி கடையில் பழக்கம்... இன்ஸ்டாகிராமில் காதல் வயப்பட்ட சிறுமிக்கு நடந்த விபரீதம்

பானிபூரி கடையில் பழக்கம்... இன்ஸ்டாகிராமில் காதல் வயப்பட்ட சிறுமிக்கு நடந்த விபரீதம்
பானிபூரி கடையில் பழக்கம்... இன்ஸ்டாகிராமில் காதல் வயப்பட்ட சிறுமிக்கு நடந்த விபரீதம்

போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மருத்துவ கல்லூரி மாணவர், சினிமா நடிகர் உட்பட நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள பள்ளியில் பயின்றுவருகிறார். இந்த நிலையில் சிறுமியின் பாட்டி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுமி வீட்டருகே உள்ள கடைக்குச் சென்று தினமும் பானிபூரி சாப்பிட்டு வரும்போது, தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ் (20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவ மாணவன் சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கி, அவருடன் தினமும் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனை தனக்கு சாதமாக மாற்றிக்கொண்ட வசந்தகிரிஷ் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமியை அழைத்துச்சென்று ஆசை வார்த்தைகூறி இணங்க வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதை வசந்தகிரிஷ் அவரது நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வசந்தகிரிஷின் நண்பர்கள் சிறுமியிடம் உனக்கும், வசந்துக்கும் இடையே நடந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க தங்களுடன் பாலியல் உறவுக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் நேற்று சிறுமியை வசந்தகிரிஷின் குடியிருப்புக்கு அழைத்துச்சென்ற 4 பேரும் அவருக்கு ஹூக்கா எனும் போதைப்பொருளை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுமி வீட்டில் பதற்றத்துடன் பயந்தது போல் இருந்ததால் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்ததாகவும், அப்போது சிறுமி நடந்த உண்மைகளை தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய வடபழனி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ கல்லூரி மாணவர் வசந்தகிரிஷ் (20), சினிமா துணை நடிகர் சதீஷ்குமார்(22), விஷால் (19) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகிய நான்குபேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com