சென்னை : 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - காரணம் குறித்து போலீசார் விசாரணை

சென்னை : 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - காரணம் குறித்து போலீசார் விசாரணை
சென்னை : 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - காரணம் குறித்து போலீசார் விசாரணை

 சென்னையில் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் கவி பிரியா (13). இவர் புனித ரபேல் பெண்கள் மேனிலை பள்ளியில் 8-வது படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பிரியா துப்பட்டாவால் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் நிலைமை மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தப் போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மயிலாப்பூர் போலீசார் விசாரணைச் செய்து வருகிறார்கள். இறந்தவர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com