தஞ்சை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 12 வயது சிறுவன் கைது!

தஞ்சை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 12 வயது சிறுவன் கைது!
தஞ்சை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 12 வயது சிறுவன் கைது!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். இதையடுத்து பிரசவவலி அதிகரிக்கவே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதால் தான் கர்ப்பமானதாக தெரிவித்திருக்கிறார். இதனால்தான் தனக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது என்று போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் விசாரித்தனர். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com