100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
Published on

உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த இளைஞர் 100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஜானி கிராமத்தில், 100 வயது மூதாட்டியை அங்கிட் புனியா என்ற இளைஞர் குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது மூதாட்டி, யாராவது காப்பாற்றுங்கள் என கதறி அழுதுள்ளார். மூதாட்டியின் சத்தம் கேட்டு அவரது சகோதரர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் குடிபோதையில் இருந்த இளைஞர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த அக்கம்பக்கத்தினர், அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் 100 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இளைஞரை கைது செய்த போலீஸார், அவர் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் குடிபோதையிலேயே இத்தகைய சம்பவத்தை செய்ததும், அவர்மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com