”முன் ஜாமின் வாங்கிட்டோம்” - நீதிமன்றத்தில் போலி ஆர்டரை காட்டிய திமுக கவுன்சிலர் கைது!

”முன் ஜாமின் வாங்கிட்டோம்” - நீதிமன்றத்தில் போலி ஆர்டரை காட்டிய திமுக கவுன்சிலர் கைது!

”முன் ஜாமின் வாங்கிட்டோம்” - நீதிமன்றத்தில் போலி ஆர்டரை காட்டிய திமுக கவுன்சிலர் கைது!

போலியாக ஆவணங்களை தாயாரித்து முன் ஜாமீன் பெற முயன்ற திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெரினாவில் தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பு செய்த வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்துவிட்டதாகவும், அதற்கான ஆவணங்களை சமர்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை மேஜிஸ்ட்ரேட் சரிபார்த்த போது, முன் ஜாமீன் வழங்கியதாக சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலி ஆவணங்களை சமர்பித்ததாக கூறி திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் எழும்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com