\
”கந்த சஷ்டி கவச ”பாடல் அவதூறு விவகாரம்:  மேலும் இருவர் கைது

”கந்த சஷ்டி கவச ”பாடல் அவதூறு விவகாரம்: மேலும் இருவர் கைது

”கந்த சஷ்டி கவச ”பாடல் அவதூறு விவகாரம்: மேலும் இருவர் கைது
Published on

”கந்த சஷ்டி கவச ”பாடல் அவதூறு  வழக்கில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் "கந்த சஷ்டி கவச" பக்திப் பாடல் குறித்து அவதூறு செய்ததால் தமிழக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக  இருந்த அவரைத்தேடி வந்தனர். இதனையடுத்து புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்த சுரேந்தரை, புதுச்சேரி போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி போலீசாரும் முறையாக இ- பாஸ் பெறாமால் புதுச்சேரிக்குள் நுழைந்ததாகக் கூறி சுரேந்தர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com