கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் - புனேவிலிருந்து சென்னை வருகை

கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் - புனேவிலிருந்து சென்னை வருகை
கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் - புனேவிலிருந்து சென்னை வருகை

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக 200 கோவிஷீல்டு மருந்துகள் புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனையை மேற்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருந்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக  ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 150 பேருக்கும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் 150 பேருக்கும் இம்மருந்துகள் கொடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற இருக்கின்றன. நாடு முழுவதும் 1600 பேரிடம் பரிசோதனை நடைபெறும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com