மூலிகைச் செடிகளை கொண்டு ஆவி பிடிப்பதால், கொரோனா வராது எனக் கூறி தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பழங்குடியின பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடம்பூர் மலைப்பகுதி நகலூரில் நல்லுறவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 126 பழங்குடியினருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அங்குள்ள பெண்கள் அனைவரும் மூலிகை கொண்டு ஆவி பிடிப்பதால் தங்களுக்கு கொரோனா வராது என வாதம் செய்தனர். அப்படியானால் மருத்துவமனைக்கு சென்று அனைவரும் சிகிச்சை அளிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பிய எஸ்.பி., விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மீண்டும் அறிவுறுத்தினார்.