தமிழ்நாட்டில் இன்று 28561 பேருக்கு கொரோனா: தொடர்ந்து உயரும் தொற்று எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று 28561 பேருக்கு கொரோனா: தொடர்ந்து உயரும் தொற்று எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று 28561 பேருக்கு கொரோனா: தொடர்ந்து உயரும் தொற்று எண்ணிக்கை
Published on

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 28561 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநிலத்தில் தொற்றால் 26981 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 19,978 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 39 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் தற்போது 1,79,205 தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 16234 பேர் ஆண்கள், 12327 பெண்கள். இன்று பாதிக்கப்பட்ட 28561 பேரில் 14 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள். 

தலைநகர் சென்னையில் 7520 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 3390 பேர், செங்கல்பட்டில் 2196 பேர், கன்னியாகுமரியில் 1148 பேர், திருவள்ளூர் 998 பேர், சேலம் 937 பேர், ஈரோடு 919 பேர், திருப்பூர் 897 பேர், நெல்லை 756 பேர், காஞ்சிபுரம் 738 பேர், மதுரை 718 பேர், கிருஷ்ணகிரி 684 பேர், திருச்சி 639 பேர், விருதுநகர் 550 பேர், தஞ்சாவூர் 544 பேர், நாமக்கல் 527 பேர், திருவண்ணாமலை 518 பேர், கடலூர் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com