தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 20,911 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 20,911 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 20,911 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநிலத்தில் 17,934 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நோய் தொற்று பாதிப்புடன் 1,03,610 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 

6,235 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 20,911 பேரில் 25 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள். அதே போல 12350 ஆண்களும், 8561 பெண்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 8218 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். செங்கல்பட்டு 2030, கோவை 1162, திருவள்ளூர் 901, மதுரை 599, கன்னியாகுமரி 538, காஞ்சிபுரம் 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com