சென்னையில் 147, கோவையில் 140 பேருக்கு பாதிப்பு - தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா

சென்னையில் 147, கோவையில் 140 பேருக்கு பாதிப்பு - தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா
சென்னையில் 147, கோவையில் 140 பேருக்கு பாதிப்பு - தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1152 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாநிலத்தில் 1164 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொற்று எண்ணிக்கை மாநிலத்தில் தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. 

தற்போது தொற்று பாதிப்புடன் 13,531 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 1,392 பேர் தொற்று பாதிப்பிலிருந்து பூரண குணம் பெற்றுள்ளனர். 19 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 

தலைநகர் சென்னையில் 147 பேருக்கும், கோவையில் 140 பேருக்கும், செங்கல்பட்டில் 93 பேருக்கும், ஈரோட்டில் 83 பேருக்கும், திருப்பூரில் 67 பேருக்கும், நாமக்கல்லில் 65 பேருக்கும், சேலத்தில் 57 பேருக்கும், தஞ்சாவூரில் 51 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 

1,30,000 க்கும் கீழ் ஒருநாள்  பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளது. 1,29,500 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சராசரியாக 1,60,000 பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இம்மாத தொடக்கத்திலிருந்தே தினசரி பரிசோதனைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com