சென்னை 144 பேர், கோவை 130 பேருக்கு கொரோனா தொற்று - தமிழ்நாடு முழு விவரம்!

சென்னை 144 பேர், கோவை 130 பேருக்கு கொரோனா தொற்று - தமிழ்நாடு முழு விவரம்!
சென்னை 144 பேர், கோவை 130 பேருக்கு கொரோனா தொற்று - தமிழ்நாடு முழு விவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,22,700 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,341 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போது 12,791 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட 1,112 பேரில் 632 பேர் ஆண்கள், 480 பேர் பெண்கள். 

மாவட்ட அளவிலான பாதிப்புகளை பார்த்தால் சென்னையில் 144 பேர், கோவையில் 130 பேர், ஈரோட்டில் 69 பேர், நாமக்கல்லில் 48 பேர், சேலத்தில் 57 பேர், தஞ்சையில் 55 பேர், திருப்பூரில் 77 பேர் மற்றும் செங்கல்பட்டில் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com