கொரோனா தொற்றுக்கு திருப்பதி எம்.பி உயிரிழந்தார்.
திருப்பதி தொகுதி எம்.பியான பல்லி துர்கா பிரசாத் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று 4 மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 64.
இவரின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி அவரது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “மக்களவை உறுப்பினர் பல்லி துர்கா பிரசாத் அவர்களின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர். ஆந்திராவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக அதிகம். எனது எண்ணம் முழுவதும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீதே உள்ளது என்று குறிபிட்டுள்ளார்.