திருவையாறு: கொரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை

திருவையாறு: கொரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை
திருவையாறு: கொரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை

திருவையாறு அருகே கொரோனா பாதிப்பின் காரணமாக மன உளைச்சலில் இருந்த முதியவர் ஆற்றில் குதித்து பலியானார்.

தஞ்சை அருகே கரந்தை செல்லியம்மன் கோவில் தெரு சிவப்பிரகாசம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் குமரேசன் (59). இவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை முடிந்து கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்தவர் தனிமையில் இருந்துள்ளார்.

இதில் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தவர் திருவையாறு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் உப்புகாச்சி பேட்டை காவிரி தென்கரையில் கரை ஒதுங்கியது. உடலை பார்த்த அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ பஹிராபானுவிடன் தெரியப்படுத்தினர்.


அவர் திருவையாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப் பதிவுசெய்து உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில் குமரேசனை காணவில்லை என்று தஞ்சை கிழக்கு போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com