சிகிச்சையிலும் கொரோனா நோயாளிகளை மகிழ்விக்கும் 'கண்ணான கண்ணே' புகழ் திருமூர்த்தி

சிகிச்சையிலும் கொரோனா நோயாளிகளை மகிழ்விக்கும் 'கண்ணான கண்ணே' புகழ் திருமூர்த்தி
சிகிச்சையிலும் கொரோனா நோயாளிகளை மகிழ்விக்கும் 'கண்ணான கண்ணே' புகழ் திருமூர்த்தி

கிருஷ்ணகிரியில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நோயாளிகளை தன் இனிமையான குரலால் மகிழ்விக்கும் மாற்றுத்திறனாளி பாடகர்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை அதே குரல் வளத்துடன் பாடியதால் பிரபலமானவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் திருமூர்த்தி. பிறவியிலேயே பார்வை மாற்றுத் திறனாளியான இவர் நல்ல குரல் வளம் கொண்டவராக உள்ளார். 

 இவரின் குரல் வளத்தை கண்டு ஆச்சரியமடைந்த இசையமைப்பாளர் இமான் தனது இசையில் பாட வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பர்கூரில் உள்ள கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தம் நீங்க திருமூர்த்தி இசை வாசித்து பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். பிறவியிலேயே கண்பார்வை இல்லை என்றாலும் நல்ல குரல்வளம் உள்ளதால் அதன் மூலம் திருமூர்த்தி அனைவரையும் மகிழ்வித்து வருவது மிகவும் பாராட்டு கூடிய விஷயமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com