திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - சத்யபிரத சாகு

திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - சத்யபிரத சாகு
திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - சத்யபிரத சாகு

திட்டமிட்டபடி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஏற்கெனவே அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, “திட்டமிட்டபடி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதிகாரிகள், ஏஜெண்ட்டுகள் கொரோனா பரிசோதனை செய்யலாமா? வேண்டாமா ? என்பது குறித்தும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com