தஞ்சை: மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா;பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்வு!

தஞ்சை: மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா;பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்வு!
தஞ்சை: மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா;பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்வு!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 11 பள்ளிகளை சேர்ந்த 180 மாணக்கர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றும் 4 கல்லூரியை 18 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், புதிதாக திருப்பனந்தாள் திருக்கயிலை அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து பள்ளி மாணவர்களில் பாதிப்பு எண்ணிக்கை 187ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கல்லூரி மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்த மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com