தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 1,631 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 1,631 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 1,631 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,58,197 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 1,631 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 1,596 என்று பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில் இன்று பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துபடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத்துறையின் அறிக்கைபடி, இன்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 174 என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் 235 பேர், ஈரோட்டில் 137 பேர், செங்கல்பட்டில் 133 பேர், திருப்பூரில் 113 பேர், தஞ்சை 87 பேர் ஆகியோருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், கோவையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது.

இன்று ஒரு நாளில் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 35,119 என உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் இறந்திருக்கின்றனர்.

ஆறுதலளிக்கும் விஷயமாக கடந்த 24 மணிநேரத்தில், 1,523 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் சிகிச்சையில் 16,304 பேர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com