தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 27,41,013 என்று உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 132 பேருக்கும், கோவையில் 95 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 691 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பதால், தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 7,078 என்றாகியுள்ளது. போலவே இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 26,97,244 என்றாகியுள்ளது.
இவையன்றி கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,691 என்றாகியுள்ளது. ஒமைக்ரான் அச்சம் நிலவுவதால், கொரோனா பரிசோதனைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (1,00,342) செய்யப்பட்டுள்ளன.