தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு இனி எந்த தடையுமில்லை: சிட்னி நகர நிர்வாகம்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு இனி எந்த தடையுமில்லை: சிட்னி நகர நிர்வாகம்
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு இனி எந்த தடையுமில்லை: சிட்னி நகர நிர்வாகம்

முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டவர்கள், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி தங்கள் நகருக்கு வருகை தரலாம் என ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டவர்கள் வருகைக்கு ஆஸ்திரேலியா அரசு தடை விதித்தது. அத்தியாவசியத் தேவைகளுக்கு பயணிப்போர் இரண்டு வாரங்கள் சொந்த செலவில் தனிமையில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டவர்கள் வரும் 1ஆம் தேதி முதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வருகை தரலாம் என சிட்னி நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com