புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநாட்டில்
புதுச்சேரியைச் சேர்ந்த மூவர், காரைக்காலைச் சேர்ந்த இருவர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்த 6 பேர் பங்கேற்றிருப்பது தெரிய
வந்துள்ளது.

அதில் புதுச்சேரியைச் சேர்ந்த இரு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் மூல‌ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய நால்வரும்
தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மாஹேவைச் சேர்ந்த 65வயது மூதாட்டி, சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com