இந்தியாவில் 100ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று

இந்தியாவில் 100ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று

இந்தியாவில் 100ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று
Published on

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா இதுவரை 101 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்தவகையில் இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 8, தெலங்கானாவில் 8, குஜராத்தில் 5, கேரளாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தமிழகம், ஆந்திரா, மேற்குவங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com