இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - மொத்த பாதிப்பு 77 ஆக உயர்வு

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - மொத்த பாதிப்பு 77 ஆக உயர்வு
இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - மொத்த பாதிப்பு 77 ஆக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தப் பாதிப்பு 77 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77ஆக உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com