\
கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று
Published on

கேரளாவில் தொடர்ந்து அதிகரித்துவந்த கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்த நிலையில், நேற்று 20 ஆயிரத்து 487 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதிக்குப்பின் தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மீண்டும் குறைந்து 20 ஆயிரம் என்ற அளவில் பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தின் TEST POSITIVITY RATE 15 புள்ளி 19 சதவிகிதமாக குறைந்துள்ள நிலையில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com