\
4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு - குஜராத் அரசு

4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு - குஜராத் அரசு

4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு - குஜராத் அரசு
Published on

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களில் நாளை முதல் மார்ச் 31 வரை இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல், நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதவாக்கில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனிடையே 85 நாட்களுக்கு பின், தற்போது பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட்டில் ஆகிய நான்கு நகரங்களில் நாளை முதல் மார்ச் 31 வரை இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com