தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

புதிதாக உருவாகியுள்ள AY 4.2 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய்த் தடுப்புத்துறை மருத்துவர்கள் குழு இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனா மற்றும் கொரோனா டெல்டா பிளஸ் ஆகிய இரு வைரஸ்கள் முதல் இரு அலைகளின்போது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த வைரஸ் மேலும் உருமாற்றம் பெற்று பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஓய் 4.2 என்ற அந்த உருமாற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அது சிலரை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே AY வகை உருமாற்ற வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை பெற்றுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. இங்கு டெல்டா வகை கோவிட் மட்டுமே தற்போதுவரை கண்டறியப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் அவரிடம், மருத்துவத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் மாற்றப்பட இருப்பதாக கடந்த 15 நாட்களாக ஒரு பேச்சு வருகிறதே? என்று கேட்டதற்கு, எல்லாம் நன்றாகத்தானே சென்று கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் யாரையும் மாற்றும் திட்டமில்லை என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com