மதுரை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு...

மதுரை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு...
மதுரை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு...

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மலர்சாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறல் அதிகரித்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் மதுரை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது மற்ற காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என காவல்துறையினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com