கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் தங்க நாணயம்: காஞ்சிபுரம் நகராட்சி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் தங்க நாணயம்: காஞ்சிபுரம் நகராட்சி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் தங்க நாணயம்: காஞ்சிபுரம் நகராட்சி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் முதல் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என காஞ்சிபுரம் நகராட்சி அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சியில் கோவிட் இல்லாத காஞ்சிபுரம் என்ற பெயரில் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ஒவ்வொரு ஒன்றியத்திலும் 100 முகாம் என ஐந்து ஒன்றியத்தில் 500 சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் 60 ஆயிரம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செலுத்தி கொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com