50% பேருக்கு மேல் இருந்தால் உரிமம் ரத்து - உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

50% பேருக்கு மேல் இருந்தால் உரிமம் ரத்து - உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

50% பேருக்கு மேல் இருந்தால் உரிமம் ரத்து - உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Published on

சென்னையில் ஓட்டல்கள், உணவகங்களில் 50% பேருக்குமேல் இருந்தால் அபராதத்துடன் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஓட்டல்கள் மற்றும் உணவங்கள் தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்படும் திருமண நிகழ்ச்சிகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 57 இடங்களில் 2,608 திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் கண்டறியப்பட்டதில் இதுவரை ரூ.2,21,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com