கேரளாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளும் குறைக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.
கேரளாவில் நேற்று முன்தினம் சுமார் 89 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 12 ஆயிரத்து 297 பேருக்கு தொற்று உறுதியானது. அதுவே நேற்று ஒரே நாளில் சுமார் 14 ஆயிரம் பரிசோதனைகள் குறைந்து 74 ஆயிரத்து 871 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பும் குறைந்து நேற்று 8 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.