இந்தியாவில் 200ஐ தொட்டது ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் 200ஐ தொட்டது ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவில் 200ஐ தொட்டது ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேரும், தெலங்கானாவில் 20 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளதாகவும், டெல்லியில் 12 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், கர்நாடகாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 19 பேரில் இதுவரை 15 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 200 பேரில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com