இந்தியா: புதிதாக 43,509 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா: புதிதாக 43,509 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா: புதிதாக 43,509 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிர பாதிப்புகள் சற்று குறைந்து உள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்புகளை விட (43,654) சற்று குறைவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 38,465 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து ஆயிரத்து 612 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.38% ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 4,03,840 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com