நேற்றைவிட அதிக பாதிப்பு: இந்தியாவில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா உறுதி

நேற்றைவிட அதிக பாதிப்பு: இந்தியாவில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா உறுதி
நேற்றைவிட அதிக பாதிப்பு: இந்தியாவில் புதிதாக  27,176 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 25,404 ஆக இருந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேருக்கு (கேரளாவில் 15,876) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,33,16,755 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 284 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,497 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,25,22,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38,012 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,51,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 75,89,12,277 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com