நேற்றைவிட பாதிப்பு கணிசமாக குறைவு: இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா உறுதி

நேற்றைவிட பாதிப்பு கணிசமாக குறைவு: இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா உறுதி
நேற்றைவிட பாதிப்பு கணிசமாக குறைவு: இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய பாதிப்பு 12,789 ஆக இருந்தது.
கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி, புதிய பாதிப்பு நேற்றைவிட கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 5,754 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 890 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,787 பேர் குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.29% என்றளவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,24,868 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை நாடு முழுவதும் 115 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரத்து 274 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 51,59,931 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com