பொதுமுடக்கம் குறித்து சந்தேகமா? - உதவி எண்களை அறிவித்தது சென்னை காவல்துறை

பொதுமுடக்கம் குறித்து சந்தேகமா? - உதவி எண்களை அறிவித்தது சென்னை காவல்துறை
பொதுமுடக்கம் குறித்து சந்தேகமா? - உதவி எண்களை அறிவித்தது சென்னை காவல்துறை

பொதுமுடக்கம் குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற, சென்னை பெருநகர காவல் கொரோனா உதவி மையத்தின் 4 செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து, தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. அதன்படி ஞாயிறன்று பொதுமுடக்கமும், வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்கள் கேட்கவும் சென்னை பெருநகர காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் 94981 81236, 94981 81239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய 4 செல்போன் எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்களுடைய உதவி மைய எண்கள், 24*7 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com