கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் : புதுச்சேரி அரசு

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் : புதுச்சேரி அரசு
கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் : புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் புதிதாக 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,400 பேர் குணமடைந்து வீடு திரும்ப, 987 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் இன்று மட்டும் அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் 34 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com