தமிழகத்தில் 5வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக முழுவிவரம்

தமிழகத்தில் 5வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக முழுவிவரம்
தமிழகத்தில் 5வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக முழுவிவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்றுவரை 2,13,692 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று 20.2% என்று இருந்த தொற்று உறுதியானோர் விகிதம் இன்று 19.9%ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 31 பேரும், அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,412 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 28,620 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,01,805 என்றாகியுள்ளது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 ஆம் தேதி முதல் கொரோனா சிகிச்சை பெற்று வந்த இணை நோய்கள் இல்லாத 47 வயது நபர் 60% நுரையீரல் பாதிப்பால் உயிரழந்துள்ளார். தமிழகத்திலேயே தினசரி 29% நபர்களுக்கு தொற்று உறுதியாகும் மாவட்டமாக உள்ளது திருப்பூர். 6,100 பேரை பரிசோதித்தால் 1,700 பேர் வரை தொற்று உறுதியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com