தமிழ்நாட்டில் 51வது நாளாக குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2,775 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் 51வது நாளாக குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2,775 பேருக்கு தொற்று உறுதி
தமிழ்நாட்டில் 51வது நாளாக குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2,775 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் 51வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்துவருகிறது.

தமிழ்நாட்டில் 1,48,182 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் 47 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,418ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 32 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 9 பேரும், 50 வயதுக்குட்பட்டவர்களில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 32,307ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 3,188 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,53,061 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com