தமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1997 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. நேற்று 1,949ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 1,997ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் 1,58,149 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 196 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 27ஆம் தேதி 139ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 196ஆக உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 111 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் 33 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,230ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 9 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 6 பேர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,138ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,943 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,15,130 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது; 22 மாவட்டங்களில் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com