தமிழ்நாடு: 2ஆம் நாளாக 1600-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு: 2ஆம் நாளாக 1600-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு: 2ஆம் நாளாக 1600-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1639 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று 1631 ஆக இருந்த கொரோனா தினசரி தொற்று, இன்று 1639 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் 4 வது நாளாக சற்று அதிகரித்துள்ளது. இன்று 1,58,623 மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், தினசரி பாதிப்பு 1639 ஆக உள்ளது.

இன்று ஒருநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் தமிழ்நாட்டில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,399 ஆக உள்ளது. இன்று கொரோனா சிகிச்சை பெற்ற மேலும் 1517 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,80,686 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com